Video Discription |
ஸ்ரீமஹா சொர்ணபைரவி சமேத சொர்ணகால பைரவர் @ ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோயில், சொர்ணபுரி, திருவிசநல்லூர், கும்பகோணம்
1. உலகில் வேறு எங்கும் காணவியலாத அதிசய, அதியற்புத திருவுருவம் இத்தெய்வ திருவுருவம்.
பைரவ உபாசகர் ஸ்ரீவேம்புச்சித்தர் தியானத்தில் தோன்றி எமக்கோர் ஆலயம் எழுப்பு என்று கேட்க அவரோ உலகில் இதுவரை எவருக்கும் காட்டிராத திருக்காட்சியை எமக்கு காட்டியருளினால் ஆலயம் எழுப்புவதாக கூற அவ்வாறே காட்டியருளுவோம் என்று கூறி அதன்பிறகு காட்டியருளியஅதிசய அதியற்புத தெய்வத் திருவுருவமே இத்திருவுருவம்.
2. நினைத்ததை நினைத்த படி தரும் தேவலோக மரமான கற்பக விருட்சத்தின் அடியில் தாமரை பீடத்தின் மீது குரு மற்றும் குபேரனின் திசையான வடக்கே அமர்ந்து, தம்மை நாடி வரும் பக்தக் கோடிகளுக்கு அபரிமிதமான தெய்வ சக்தியினை ஈர்த்து தரும் வகையிலே தெய்வ சக்தி நிறைந்த ஈசானியம் எனும் வடகிழக்கு நோக்கி அமர்ந்தவர்.
3. ஸ்ரீமஹா சொர்ண (ஆகர்ஷண) கால பைரவர் சிவ, விஷ்ணு, பிரம்ம சொரூபர். அஷ்ட பைரவர், மற்றும் அஷ்டாஷ்ட பைரவர்களின் மொத்த சொரூபம். இவர் தம் மேல் திருக்கரங்களில் ஸ்ரீமஹா சொர்ண பைரவி அம்மையை சற்றே அணைத்தவாறு நவநிதிகளில் இருபெரும் நிதிகளான சங்கநிதி, பத்ம நிதிகளை தாங்கி இருப்பவர். மேலும் தம் மடியில் சர்வ தேவ தேவதா தெய்வங்கள் நிறைந்த, சர்வ நோய் நொடிகளை தீர்க்கக்கூடிய அமிர்தம் நிறைந்த பூரண அம்ருத கும்பத்தை வைத்திருப்பவர்.
4. ஸ்ரீமஹா சொர்ண(வர்ஷிணி) பைரவி காளி, சரஸ்வதி, லட்சுமி ஐக்கிய ரூபிணி. அஷ்ட பைரவி மற்றும் அஷ்டாஷ்ட பைரவிகளின் மொத்த சொரூபம். இவர் ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவரின் இடுப்பை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தால் தம் மடியில் வற்றாத ஜீவ நதி போல் அட்சய பாத்திரம் போல், அமுத சுரபி போல் சொர்ணம் சுரந்து சுரந்து பொங்கி பொங்கி வழியக்கூடிய சொர்ண கும்பத்தை பிடித்துவைத்து இருப்பவர்.
5. இருவரும் அன்பு மிகு கொண்டு ஒருவரை ஒருவர் சற்றே அணைத்தவாறு, புன்னகை பூக்கும் திருமுகங்களுடன் சர்வானந்த கோலாகலராய் இருப்பவர்கள்.
6. அஷ்ட ஐஸ்வர்யங்களையும், நவ நிதிகளையும், பதினாறு பேறுகளையும், அறுபத்திநான்கு கலைகளையும் யோகங்களையும் வாரி வாரி வழங்குபவர். பஞ்சபூத வசியம், சர்வ வசியமும் கிட்ட செய்பவர்.
7. சர்வ கஷ்ட நஷ்ட உபத்திரவங்களை, கடன் தொல்லைகளை, சர்வ சாப பாப தோஷங்களை, ஏவல் பில்லி சூனியங்களை, சகல குடும்ப, அக்கம்பக்கத்து, தொழில் போட்டி, சண்டை சச்சரவுகளை, கண் திருஷ்டி, ஓமலப்பு, பொறாமைகளை, சர்வகாரிய தடைகள், விக்கினங்களை களைபவர். நவக்கிரக தோஷங்கள் யாவும் விலகும்.
8. அனைத்து விதமான பரிகாரங்களும் செய்ய உகந்த, அனைத்து ராசி, நட்சத்திரக் காரர்களும் வந்து வணங்கி பலன் பெற வேண்டிய அதியற்புத தெய்வீக சக்திகள் நிறைந்த திருத்தலம்.
9. இங்கு தினசரி இரவு வேளைகளில் சர்வ தேவ தேவதா தெய்வங்களும், அஷ்ட லட்சுமிகளும், குபேரனும், சர்வ சித்த, ரிஷி, முனி யோகி, நாதாக்களும் வந்து வணங்கு கின்றனர். சர்வ ச்சேத்ர பைரவப் பெருமான்களும் இங்கு வந்து ஒருசேர கூடுகின்றனர். ஆக இங்கு வந்து வழிபடுவது என்பது மிக சாலச்சிறந்தது.
10. திருவாலய_வழிபாட்டு_சிறப்பு:
இத்திருவாலயத்தில் வந்து கால் பதிக்க தலையெழுத்து மாறும். ஸ்ரீமஹா அம்மையப்பனை தொழுது கும்பிட ஜாதகத்தில் உள்ள பாதகங்கள் சாதகங்கள் ஆகும். இங்கு வந்து வணங்க ஆயிரம் கோயில் சென்று வணங்கிய பலன் உடனே கிட்டும். நினைத்தது நினைத்தபடி நடக்கும். கேட்டது கேட்டபடி கிடைக்கும். ஸ்ரீமஹா அம்மையப்பன் இருக்கும் இடத்தில் சொர்ணம் கொழித்துக் கொண்டே இருக்கும்.
11. திருவாலய_திறப்புநேரம்:
தினசரி திருவாலயம் காலை 09.00 மணி முதல் 01.00 மணி வரையும் மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரையும் திறக்கப் பெற்றிருக்கும்.
13. சிறப்பு_அபிஷேக_ஆராதனைகள
மற்றும்_ஹோமம்:
ஒவ்வொரு மாதம் வரும் அம்மாவாசை, பௌர்ணமி, தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி நாட்களில் நமது ஆலயத்தில் காலை 09.00 மணிக்கு ஸ்ரீமஹா அம்மையப்பனுக்கு க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் 10.00 மணிக்கு ஸ்ரீகால, ஸ்ரீஅஷ்ட, ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமமும் நடைபெறும். நான்கு நாட்களும் மதியம் அன்னதானம் நடைபெறும்.
14. பைரவர்_அருள்வாக்கு:
தினசரி காலை 09.00 முதல் மதியம் 01.00 மணி வரை பைரவர் அருள்வாக்கு சொல்லப்பெறும். முன் அனுமதி பெற்று நேரில் வரவும்.
15. நினைத்த_காரியம்_நிறைவேற:
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவப் பெருமானுக்கு சம்பங்கி மாலை வாங்கி சாற்றி பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து இரண்டு தூய பசு நெய் தீபம் போட்டு ஆலயத்தை 27 முறை சுற்றி வழிபட்டு செல்ல நினைத்தது யாவும் நிறைவேறும். இதை எல்லா நாட்களிலும் செய்யலாம். குறிப்பாக இதை தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் செய்வது நல்லது. பௌர்ணமி அன்று செய்வது இன்னும் சிறப்பு.
16. வீட்டில்_பணப்புழக்கம்_இருந்து
கொண்டே_இருக்க:
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, அம்மாவாசை, பௌர்ணமி, வியாழன் அன்று குரு ஓரைகள், வெள்ளிக்கிழமை அன்று சுக்ர ஓரை வேளைகளில் 108 காசுகளை ஒரு மஞ்சள் பட்டுத் துணியில் சுற்றிக் கொண்டு வந்து அதை ஸ்வாமி பாதத்தில் வைத்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து இரு பசு நெய் தீபம் ஏற்றி வணங்கி இந்த முடிச்சை கொண்டு போய் காசு பணம் புழங்கும் இடத்தில் வைக்க பணப்புழக்கத்திற்கு பஞ்சமே வராது.
சொர்ண ஸ்ரீவேம்புச்சித்தர்,
(பைரவ உபாசகர்)
சர்வலோக_பைரவர்_சமஸ்தானம்,
ஸ்தாபகர்,
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் திருக்கோயில்,
ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் வழிபாட்டு குழு,
வினைதீர்க்கும் ஸ்ரீவேம்புச்சித்தர் ஆசிரமம் எனும்
ஸ்ரீமஹா சொர்ண பைரவி சமேத சொர்ணகால பைரவர் சித்தர் பீடம்,
ட்ரஸ்டீ: ஸ்ரீ வேம்புச்சித்தர் சாரிடபிள் ட்ரஸ்ட், திருவிசநல்லூர்,
கும்பகோணம் -612105
#அலைபேசி:94449_64303 [SqNSHoagwO4] |